நான் என்ன சொல்லுவேன்
என் இயேசுவின் அன்பை
நான் எப்படி பாடுவேன்
அவர் எனக்காய் செய்ததை
தள்ளப்பட்ட கல்லாக கிடந்த என்னையே
தகப்பன் நீர் தேடி வந்து தூக்கி எடுத்திரே
தகுதியே இல்லாத எந்தன் வாழ்விலே
தகுதிக்கு மிஞ்சின நன்மை செய்தீரே
நான் என்ன சொல்லுவேன்
உம்மை எப்படி பாடுவேன்
அனாதையாய் தனிமையிலே அலைந்த என்னையே
தேடி ஓடி வந்து ஆதரித்தீரே
விரும்பா பாத்திரமாய் இருந்த என்னையே
விரும்பின கரத்தினால் ஆசீர்வதித்தீரே
பாழான நிலமாக இருந்த என்னையே
பயிர் நிலமாக மாற்றி வாழ்க்கை தந்தீரே
கடக்கவே முடியாத பாதையிலெல்லாம்
கரங்களில் ஏந்தி என்னை சுமந்து வந்தீரே
நான் உம்மை உயர்த்துவேன்
உமதன்பை பாடுவேன் - இயேசுவே
Nan enna solluven
en yesuvin anbai